மீன் தொட்டி

Monday, August 23, 2010

அனுபவம்

அடி ஒன்று முதலில் விழ
அலறித் துடித்தேன்
அடி இரண்டு அடுத்து விழ
ஐயோவென்றேன் நோவினால்
அடிக்குஅடி மேலும் விழ
அழுதழுது கதறினேன்
அடி அடுத்தடுத்து கூடி விழ
ஆருமே வரவில்லை
அடி பட்ட புண்நோவால் அழுது
ஆண்டவனையும் கூப்பிட்டேன்
அடி நோவால் அடியெடுக்க முடியாமல்
அனாதையாக் கிடந்தேன்
அடி என்னை அடிக்க அடிக்க
அடி தாங்கியாகிவிட்டேன்
அடி யிப்போ இடியாக விழுந்தாலும்
அச்சமின்றி இருக்கின்றேன்
அடி தந்த பக்குவத்தை நான்
ஆரிடம்போய்ச் சொல்லுவேன்?

சுட்ட கவிதைங்க நல்லாதான் இருக்கும்............

No comments:

Post a Comment