மீன் தொட்டி

Friday, September 10, 2010

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி
என் வாழ்வில் சொர்க்கம் கூடுமடி

ஒரு வார்த்தை சொன்னால் போதுமடி
என் வாழ்வில் சொர்க்கம் கூடுமடி
என் வார்த்தை எல்லை தாண்டுதடி
உன்னை வாரி அணைக்க தூண்டுதடி
உன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுமடி

ஒரு தாமரை நடக்குது தரை மேலே
அதன் காலடி சுவடுகள் கவி போலே
(ஒரு தாமரை..)
வரும் பாதையில் மணம் வீசுதே
மணம் பரவட்டும் பரவட்டும் விண்மேலே
(ஒரு தாமரை..)

என் தேகம் தீர்க்கும் தேவதையே
உன் பாடல் கேட்டேன் பூங்குயிலே
(என் தேகம்..)
ஒரு பார்வை பட்டால் போதுமடி
என் பசியும் பறந்து போகுமடி
உன் பூமுகமே ஒரு பூச்சரமே
என் வாழ்வில் வாசம் வீசுதடி
(ஒரு தாமரை..)

No comments:

Post a Comment