மீன் தொட்டி

Thursday, September 16, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - இறுதி பகுதி 10


அடைக்கப்பன் அவர்களின் மறைவு

சில ஆண்டு காலமாக உடல் நலம் குன்றி திருச்சி சிவசக்தி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைபெற சென்று வந்தார். ஒருநாள் இவரின் மோசமான உடல்நிலை காரணமாக 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கபட்டு, ஒரு வாரகாலம் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் கண்டு பின்னர் அதே மாதம் 31 ஆம் நாள் இரவு 10:00 மணியளவில் யாரும் எதிர்பாராது தீடீர்ரென மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இந்த சரித்திர சக்ரவர்த்தியின் மறைவால் ஒட்டுமொத்த மக்களும் பண்ணையும் பெரும் துக்க துயரத்திற்கு ஆளாக்கப்பட்டு ஈடுஇணையற்ற இழப்பை ஏற்படுத்தியது. இவர் தன் வாழ்நாளில் ஆற்றிய செம்மையான பல அற்புத திட்டங்களினாலும் எல்லோரையும் சமமாக எண்ணும் உயரிய பண்பினாலும் ஏராளமான மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார். தனது வாழ்க்கை பயணத்தில் எண்ணற்ற வெற்றிகளையும் இடர்பாடுகளையும் கொண்ட அவரது அபாரமான அனுபவத்தை இந்த இளயதலைமுறைக்கும் சமுதாயத்திற்கும் விட்டு சென்றார். இச்சமுதாயம் தங்களது வாழ்க்கையை செம்மைப் படுத்திகொள்ள அவரது வாழ்க்கைமுறையும் அனுபவமும் அமைய வேண்டுமென்பது அவரது கடைசிகால விருப்பமாக இருந்தது.

பண்ணையின் வேர்களும் துளிர்களும்

பண்ணையின் மனநிறைவும் வருத்தமும்

பெருவாரியான மனித குடும்பங்களை கொண்ட இக்கிராமத்தையும் இதனை சார்ந்த கிராமங்களையும் இயற்கை வழிகொண்டு ஏராளமான செயல்களினால் சுழற்றிவரும் இந்த பண்ணைக்கு மட்டற்ற மனநிறைவும், அந்த செயல்களில் இருந்து மக்களுக்கு வெளிப்படும் தேவையற்ற உபரி மனஅலைகளான வஞ்சம், பொறாமை, சந்தேகம், புறம்பேசுதல் போன்ற கொடிய நச்சுக்கிருமிகளுக்கு அவர்கள் அடிமைபடுதல், மற்றும் அதற்குமாறாக அடிப்படை தேவையான கடின உழைப்பு, முன்னுதாரண முறை, முற்போக்கு சிந்தனை, பொதுத்துவம், இயற்கைவழி போன்ற செயல்கள் சற்று தாழ்ந்து காணுவதால் சிறுவருத்தமும் இப்பண்ணைக்கு ஏற்படுகின்றது. இச்சிறு வருத்தத்தால் பெரும் போராட்டத்தை பண்ணை சந்திக்கிறது. எந்த ஒரு செயலிலும் சில இழப்புகளை தாங்கி பல நன்மைகளை பெற்று பொலிவடைவது சற்று கடினமான காரணம் என்பது எல்லோரும் அறிந்த தகவல்தான் அதுபோல பண்ணைக்கு எதிராக சில முற்போக்கு சிந்தனையற்ற மனிதர்களால் கிராமத்தின் ஒருமைப்பாடு என்னும் மக்களின் வலுப்பிணைப்பை உடைத்தெறிந்து வருகின்றதனால் சிறு மனவருத்தமும் இந்த உயிருள்ள பண்ணைக்கு உள்ளது. இருபினும் இப்பண்ணையால் திறன் கொண்டு இயக்கப்படும் மோழியின் ஆழம் எல்லவற்றையும் உடைத்தெறிந்து கிராமத்தையும் அதனுடைய பொருளாதார வளர்ச்சியையும் இவ்வுலகில் ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துசெல்லும் என்பதில் ஐயமில்லை.

பண்ணையின் அழியா நினைவுகள்



***முற்றும்***

No comments:

Post a Comment