மீன் தொட்டி

Tuesday, September 7, 2010

மோழியின் ஆழம் - ஒரு விவசாயப்பண்ணையின் சரித்திரம் - பகுதி 09

பள்ளிக்கு பின்பு

செந்தில் குமார் தன் இளநிலை பட்டத்தை வேதியியல் துறையில் திருச்சி செயிண்ட் ஸோசப் கல்லூரியில் பெற்று பின்னர் சென்னை புது கல்லூரியில் முதுநிலை வேதியியல் துறையில் சேர்ந்து பயின்று வந்தார். இருபினும் சென்னை சூழல் ஒவ்வாததை அடுத்து கீழப்பட்டிற்கு வந்து விவசாய வேலைகளை கவனித்து வந்தார். இவருக்கு திருமணம் மீனா என்ற பெண்ணுடன் 2002 ஆம் ஆண்டு நடைபெற்று கோபிகிருஷ்ணன், அபிராமி மற்றும் விக்கி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட சில தவிர்க்க முடியாத காரணத்தால் சேகர்-காந்தியை விட்டு தனியாக தன் சொத்துகளை பிரித்து செவிடன் காட்டில் களத்தை அமைத்து அங்கேயே குடியேறினார். இவருக்கு செவிடன், கரியான் மற்றும் களர்காடுகளைக் கொண்டும், பெரியகுளத்து வயல்களில் சிலவற்றை கொண்டும் பிரித்துகொண்டார்.

இரவி தன் பள்ளிபடிப்பை முடித்துவிட்டு திருச்சியிலுள்ள எம்ஐஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து இளநிலை மற்றும் முதுநிலை கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். அதனை அடுத்து ஒருவருட காலம் சென்னையில் பணியாற்றி பின்னர் சேலத்திலுள்ள விநாயகா கல்வி நிலையத்தில் சேர்ந்து முதுநிலை கணிப்பொறியியல் துறையில் பட்டம் பெற்று அதே கல்வி நிலையத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். கணிப்பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற தொடர்ந்து படித்து வருகின்றார். இவருக்கு திருமணம் தனலட்சுமி [முதுநிலை கணிப்பொறியியல் துறையில் சேர்ந்து பயின்று வருகிறார்] என்பவருடன் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் நடைபெற்று சியாம் கிருஷ்ணன் என்ற ஆண்குழந்தை உள்ளது.

சந்திர சேகர் தன் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு திருச்சியிலுள்ள எம்ஐஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் துறையில் சேர்ந்து பயின்று வந்த இவர் சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் குறுகிய காலத்திலே கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இவருக்கு திருமணம் பத்மாவதி என்பவருடன் 2005 ஆம் ஆண்டு கோயிலில் நடைபெற்றது.

கிட்டு தன் பத்தாம் வகுப்பை முடித்தவுடன் திருச்சியிலுள்ள எம்ஐஇடி பல்தொழில்நுட்ப கல்லூரியில் கலைமணி அவர்களின் பரிந்துரைபடி சேர்ந்து இயந்திரவியல் பொறியியல் பட்டையத்தை பெற்று பின்னர் எம்ஐஇடி பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டத்தை இயந்திரவியல் பொறியியல் துறையில் பெற்று ஒரு வருடகாலம் இரிசார் டிவிஎஸ் பேருந்து கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியற்றினார். கலைமணி அவர்களின் தலைசிறந்த கல்வி உதவியின் பயனாக அனைவரும் நல்லதொரு நிலையை அடைந்து போற்றதக்க மனிதர்களானார்கள். அதன் பின்னர் திருச்சி தேசிய தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் தொழிற்சாலைப் பாதுகாப்பு பொறியியல் துறையில் பயின்று ஐக்கிய அரபு நாடுகளில் பயிற்சியை முடித்து முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று, ஒரு வருடத்திற்கு மேல் ராஜஸ்தான் உதையபூர் ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி, தற்பொழுது பஹ்ரைன் தேசிய தொழிற்பாதுகாப்பு மற்றும் சுகாதார மையத்தில் 2006 ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தொழிற்பாதுகாப்பு மூத்த நிபுணராக பணியற்றி வருகின்றார்.

காந்தி பன்னிரெண்டாம் வகுப்புடன் தன் படிப்பை நிறுத்தி கொண்டார். பின்னர் முழுமுயற்சியுடன் கவனத்தை விவசாயதில் செழுத்தி புதிய முறைகளை கையாண்டு விவசாய உற்பத்தியை பெருக்கினார். போஸ் பத்தாம் வகுப்பை முடித்தவுடன் திருச்சியிலுள்ள எம்ஐஇடி பல்தொழில்நுட்ப கல்லூரியில் இரசாயனப் பொறியியல் பட்டையப் படிப்பை தொடர்ந்து கொங்கு பொறியியல் கல்லூரியில் இளநிலை பட்டத்தை இரசாயனப் பொறியியல் துறையில் பெற்று அதன் பின்னர் திருச்சி சாஸ்த்ரா [சண்முகா] பல்கலைகழகத்தில் தொழிற்சாலைப் உயிரித் தொழில்நுட்ப துறையில் முதுநிலை பட்டம் பெற்று அதே கல்வி நிலையத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர் கோவா நிக்கோமெட் என்ற நிறுவனத்தில் செயலாக்க பொறியாளராக பணியாற்றி வருகின்றார்.

நவீன் தன் தந்தையின் துறையிலேயே தொடர வேண்டுமென்று எண்ணி சேலம் சட்டக்கல்லூரியில் இளநிலை பட்டம் சட்டத்துறையில் பெற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். சக்தி பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் திருச்சியிலுள்ள கிருத்துவ கல்லூரியில் இளநிலை மின்னனுவியல் பட்டம் பெற்று பின்னர் கோயம்புத்தூர் அரசு சட்டக்கல்லூரியில் இளநிலை பட்டம் சட்டத்துறையில் பயின்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார்.

சரண் பன்னிரெண்டாம் வகுப்பை முடித்தவுடன் சென்னை இராமசந்திரா மருத்துவ கல்லூரியில் தன் இளநிலை பட்டத்தை மருத்துவ துறையில் பயின்று வருகின்றார். இவர் தன் புத்தி கூர்மையால் அறிவாற்றலில் தலைசிறந்து விளங்குகிறார். இவ்வூருக்கு முதல் மருத்துவர் என்ற பெருமையும் இவருக்குண்டு.

No comments:

Post a Comment