மீன் தொட்டி

Thursday, November 1, 2012

கீழப்பட்டி வருந்துகிறது!!!

திரு. அடைக்கன் அவர்கள்
(புகைப்பட நாள்: 10/06/2005)
திரு. அடைக்கன் பூசாரி அவர்கள் 13/10/2012 - சனிக்கிழமை அன்று காலை அவரது வீட்டிலிருந்து களத்துக்கு செல்லும் போது ஆற்றை கடந்த சில அடி தூரத்திலே மயங்கி கீழே விழுந்துவிட்டார், அதைதொடர்ந்து அவரது காதில் குருதி கசிவும் ஏற்ப்பட்டது. பின்னர் உடனடியாக வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்துவிட்டது. 

இயந்திரவியல் மற்றும் மின்னியல் துறையில் அவரது பங்களிப்பு இந்த பகுதி மக்களுக்கு மிக மிக அதிகம். . ஒரு காலகட்டதில் கமலைகள் (மாடுகள் கொண்டு நீர் இரைக்கும் முறை) மறைந்து, விசை பம்புகள் வந்த காலகட்டதில் பாமர விவசாய மக்களுக்கு இவரது தொண்டு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இவர் ஆண்டிக்கோன் குளக்கரையில் அமைந்துள்ள கருப்பகோயில் பூசாரியாகவும் தன்பணியை செவ்வனே செய்து வந்தார். 

இவரது இழப்பு மாபெரும் இழப்பு என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்திற்கு எமது ஆதரவும், அரவணைப்பும் என்றென்றும் உண்டு. இவரது ஆத்மா சாந்தி அடைய கீழப்பட்டி மக்களின் சார்பாகவும், பண்னையின்  சார்பாகவும் இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.

No comments:

Post a Comment